மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மாணவி வன்கொலையைக் கண்டித்து லால்பஜாரில் உள்ள காவல்துறை தலைமையகம் முன்பு போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், பொதுமக்களுடன் பேரணியாக சென்றனர். பெண்டிங் தெருவில் தடுப்புகள் மூலம் பேரணியை தடுத்த போலீசார் 14 சிபிஎம் ஊழியர்களை கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிபிஎம் ஊழியர்களை விடுக்கக் கோரி கடந்த 24 மணிநேரமாக லால்பஜாரில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.